/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் 23 பேருக்கு 25 வரை சிறை
/
மீனவர்கள் 23 பேருக்கு 25 வரை சிறை
ADDED : நவ 12, 2024 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: கடந்த 9ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோரது விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை வீரர்கள், மூன்று படகுகளில் இருந்த 23 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
பின், அந்த மீனவர்கள் மீது யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை, நவ., 25 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.