/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரட்டை மடியில் மீன்பிடிக்க ஆயத்தம்: மீனவர்கள் புகார்
/
இரட்டை மடியில் மீன்பிடிக்க ஆயத்தம்: மீனவர்கள் புகார்
இரட்டை மடியில் மீன்பிடிக்க ஆயத்தம்: மீனவர்கள் புகார்
இரட்டை மடியில் மீன்பிடிக்க ஆயத்தம்: மீனவர்கள் புகார்
ADDED : ஜன 13, 2025 06:43 AM
ராமேஸ்வரம் : தடை செய்யப்பட்ட இரட்டை மடியில் மீன்பிடிக்க ராமேஸ்வரத்தில் ஆயத்தமாகி வருவதாக கடலோர சிறுதொழில் மீனவர்கள் தெரிவித்தனர்.
கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சிலர் விசைப்படகு, நாட்டுப்படகில் தடை செய்யப்பட்ட இந்த வலைகளில் மீன் பிடிக்கின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் ஜன., முதல் இரட்டை மடியில் மீன் பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி கனரக விசைப்படகில் இரட்டை மடியை ஏற்றி மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி இருப்பதாக கடலோர சிறுதொழில் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் போஸ் கூறியதாவது:
தற்போது ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடியில் மீன்பிடிக்க பலரும் தயாராகி உள்ளனர்.
இலங்கை கடற்படையின் கெடுபிடி அதிகரித்து வரும் நிலையில் எல்லை தாண்டி செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதனால் குறுகிய கடல் பரப்பை கொண்ட ராமேஸ்வரம் கடல் பகுதிக்குள் இரட்டை மடியில் மீன் பிடித்தால் மீன் வளம் முற்றிலும் அழிந்து போகும். இதனால் சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இரட்டை மடியில் மீன் பிடிப்பதை தடுக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.