sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரியமானில் தொழிலுக்கு செல்லும் பாதையில் வேலி: மீனவர்கள் எதிர்ப்பு

/

அரியமானில் தொழிலுக்கு செல்லும் பாதையில் வேலி: மீனவர்கள் எதிர்ப்பு

அரியமானில் தொழிலுக்கு செல்லும் பாதையில் வேலி: மீனவர்கள் எதிர்ப்பு

அரியமானில் தொழிலுக்கு செல்லும் பாதையில் வேலி: மீனவர்கள் எதிர்ப்பு


ADDED : ஆக 05, 2025 05:10 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே அரியமான் கடற்கரையில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வழி மற்றும் கோயில் விழா கரகம் எடுக்கும் பாதையை மறைத்து கடலோர காவல்படை வேலி அமைக்க கூடாது என சாத்தக்கோன் வலசை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாத்தக்கோன்வலசை ஊராட்சியை சேர்ந்த பிள்ளை மடம், தில்லைநாச்சியம்மன் கோவில் குடியிருப்பு ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதில், பிள்ளை மடம், தில்லைநாச்சியம்மன் கோவில் குடியிருப்பு, உடையார் வலசை ஆகிய கிராம மக்கள் அரியமான் கடற்கரை கிழக்கு பகுதியில் மீன்பிடி தொழிலுக்காக செல்கிறோம்.

இவ்வழியாகத்தான் கோயில் விழாவின் போது கரகம் எடுத்து வந்து வழிபடுகிறோம்.

இந்நிலையில் தொழிலுக்கு செல்லும் பாதையை மறைத்து தற்போது அரியமான் கடற்கரையில் கடலோர காவல்படையினர் வேலி அமைத்தும், தடுப்புசுவர் அமைக்க உள்ளனர்.

இதனால் அருகே முகத்துவாரம் கடல் நீர் மற்றும் காற்றின் வேகம் அதிகமாகும் நேரத்தில் ஆற்றுக்கரை வழியாக கிராமங்களுக்கு கடல்நீர் உள்ளே வரும் நிலை உள்ளது.

கோயில் திருவிழா, அன்றாட தொழிலுக்கு செல்லும் வகையில் பாதையை ஒதுக்கிதர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us