sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விமான நிலையத்திற்கு இடம் எடுக்க கூடாது: கும்பரம் மக்கள் கோரிக்கை

/

விமான நிலையத்திற்கு இடம் எடுக்க கூடாது: கும்பரம் மக்கள் கோரிக்கை

விமான நிலையத்திற்கு இடம் எடுக்க கூடாது: கும்பரம் மக்கள் கோரிக்கை

விமான நிலையத்திற்கு இடம் எடுக்க கூடாது: கும்பரம் மக்கள் கோரிக்கை


ADDED : ஆக 05, 2025 05:08 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : மண்டபம் வட்டாரத்தில் உள்ள கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். இதில், கும்பரம் ஊராட்சியில் 10 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது.

இதுபோக நிலக்கடலை, எள், பயறு வகைகள், கொய்யா வளர்க்கப்படுகிறது. 1000 குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் ஒட்டு மொத்தமாக தென்னை உள்ளிட்ட விவசாயம் அழிந்துவிடும். எனவே கும்பரத்தில் விமானம் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us