ADDED : மார் 24, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: கடல், மீன்வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய மீனவர்களை மீன்பிடி தொழிலை விட்டும், அவர்களின் வாழ்விடங்களை விட்டும் வெளியேற்றும் வகையில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முத்துப்பேட்டை ஊராட்சி இந்திரா நகர் மன்னார் வளைகுடா கடலில் இறங்கி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். கடல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கருணாமூர்த்தி வரவேற்றார்.பாலுச்சாமி, முனியசாமி, சுமதி, பாப்பா கலந்து கொண்டனர்.