/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரை திரும்பிய விசைப்படகு மீனவர்கள்
/
கரை திரும்பிய விசைப்படகு மீனவர்கள்
ADDED : அக் 21, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (அக்.,21) முதல் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் ராமநாதபுரம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என தொண்டி மீன்வளத்துறையினர் அறிவித்தனர்.
இது குறித்து மீன்வளத்துறையினர் கூறுகையில், தொண்டி பகுதியில் 77 விசைப்படகுகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடிக்க சென்ற சில மீனவர்கள் மட்டும் கரை திரும்பியுள்ளனர் என்றனர்.