ADDED : நவ 07, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ் வரத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மீனவர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி., ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர் பிச்சை, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், மாவட்ட துணைத் தலைவர் பெருமாள், மாநில மீனவரணி செயலாளர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

