/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடிப்பூரத் திருவிழாவில் ஜூலை 19ல் கொடியேற்றம்
/
ஆடிப்பூரத் திருவிழாவில் ஜூலை 19ல் கொடியேற்றம்
ADDED : ஜூலை 12, 2025 11:34 PM
திருவடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.
ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஜூலை 19 காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27ல் தேரோட்டம், 29 ல் அம்பாள் தவசு, 30 ல் திருக்கல்யாணம், மறுநாள் சுந்தரர் கைலாச காட்சியும் நடைபெறும். விழா நாட்களில் காமதேனு, அன்னம், கிளி, வெள்ளி ரிஷபம், கமல வாகனம், குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

