தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொட்டியது மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொட்டியது மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
UPDATED : அக் 18, 2025 11:01 AM
ADDED : அக் 18, 2025 08:26 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 176 மிமீ மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் அக்டோபர் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும் அக் 23ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
ராஜபாளையம் 176
கும்மிடிப்பூண்டி 164
தேக்கடி 158
பொன்னேரி 136
காயல்பட்டினம் 120
அலக்கறை எஸ்டேட் 113
வேம்பக்கோட்டை அணை 93
மாம்பழத்துறை ஆறு 87
ஆணைக்கிடங்கு 85
அடையாமடை 82
மண்டபம் 67
தென்காசி 98
செங்கோட்டை 96
ஆயிக்குடி 96
குண்டாறு அணை 88
ராமநதி அணை 86
கடனா நதி 80
சிவகிரி 75
குன்னூர் 95
பர்லியார் 93
சண்முக நதி 95
கீழ் கோத்தகிரி 76
பந்தலூர் 74
திருச்செந்தூர் 74
மன்னார்குடி 77
ஓட்டப்பிடாரம் 70
எண்ணூர் 69
மணலி புதுநகரம் 65
தேனி 68
கூடலூர் 54
நீடாமங்கலம் 49
சங்கரன்கோவில் 38