ADDED : செப் 12, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை:
கீழக்கரை பரதர் தெருவில் புனித அந்தோனியார் சர்ச் வளாகத்தில் உள்ள கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மட்டியரேந்தல் பாதிரியார் குரூஸ் ஜோக்கின் தலைமை வகித்தார்.
கீழக்கரை பங்குத்தந்தை சவரி முத்து முன்னிலை வகித்தார். நாளை (செப்.14) அன்று மாலை 6:00 மணிக்கு திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கீழக்கரை பங்கு இறைமக்கள் மற்றும் பங்கு பணியாளர்கள் செய்திருந்தனர்.
