sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வனத்துறையினருக்கு காட்டுப்பன்றிகளை சுட பயிற்சி

/

வனத்துறையினருக்கு காட்டுப்பன்றிகளை சுட பயிற்சி

வனத்துறையினருக்கு காட்டுப்பன்றிகளை சுட பயிற்சி

வனத்துறையினருக்கு காட்டுப்பன்றிகளை சுட பயிற்சி


ADDED : ஜன 29, 2025 01:31 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன ரேஞ்சர், பாரஸ்டர், கார்டுகளுக்கு மீண்டும் துப்பாக்கி சுடும் புத்தாக்க பயிற்சி முகாம் தேனி வைகை அணை, சென்னையில் நடக்கிறது.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நன்கு விளைந்த பயிர்களை சேதப்படுத்துகின்றன.

வனத்துறையில் ஏற்கனவே துப்பாக்கியை கையாளத் தெரிந்த வனரேஞ்சர், பாரஸ்டர், கார்டு ஆகியோரை குழுவாக வரவழைத்து பகுதிவாரியாக தேனி மாவட்டம் வைகை அணை, சென்னையில் துப்பாக்கி சுடும் புத்தாக்கப்பயிற்சி துவங்கியது. தலா 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் காட்டுப்பன்றிகளை சுடுவதற்குரிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us