ADDED : மே 13, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துா : முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு விளக்குபூஜை நடந்தது.
மகாதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாரதனை நடந்தது. 108 விளக்குபூஜை நடந்தது. முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில், திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்குபூஜை நடந்தது. சித்திரங்குடியில் சீலைக்காரி அம்மன் கோயிலில் சிறப்புபூஜை நடந்தது.