ADDED : டிச 01, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே அரியநாச்சிபுரத்தில் பேரையூர் எஸ்.ஐ., மலைராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டு தப்பி ஓடினார். பின்பு போலீசார் பிடித்து சோதனை செய்ததில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சின்னஆனையூர் சேர்ந்த கணேசபாண்டியனை 34, போலீசார் கைது செய்தனர்.

