நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கவுரவத் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்றார். மறைந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொருளாளர் ராமசாமி சங்கத்தின் நிதிநிலை அறிக்கை வாசித்தார். சங்கத்தின் வளர்ச்சி, புதிய கட்டடம் கட்டுவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

