ADDED : ஆக 26, 2025 03:25 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருட்டு நடப்பதாக புகார்கள் வந்தன.
அதன் பேரில் போலீசார் ஆடு திருடுவோரை தேடி வந்தனர். இந்நிலையில் 9 ஆடுகளை திருடி சென்ற திருப்புல்லாணி வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அபுல்ஹசன் 41, என்பவரை கேணிக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் வாடகை வாகனம் ஓட்டி வருவதாகவும், சவாரி போக மீதமுள்ள நேரத்தில் இது போன்று ஆடுகளை திருடி விற்பதாக போலீசார் தெரி வித்தனர்.
