sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் நடுவழியில் நிற்கும் அரசு பஸ்கள்: ஓட்டை உடைசலால் அடிக்கடி பிரேக்டவுன் ஆகிறது 

/

ராமநாதபுரத்தில் நடுவழியில் நிற்கும் அரசு பஸ்கள்: ஓட்டை உடைசலால் அடிக்கடி பிரேக்டவுன் ஆகிறது 

ராமநாதபுரத்தில் நடுவழியில் நிற்கும் அரசு பஸ்கள்: ஓட்டை உடைசலால் அடிக்கடி பிரேக்டவுன் ஆகிறது 

ராமநாதபுரத்தில் நடுவழியில் நிற்கும் அரசு பஸ்கள்: ஓட்டை உடைசலால் அடிக்கடி பிரேக்டவுன் ஆகிறது 


ADDED : மே 20, 2024 11:09 PM

Google News

ADDED : மே 20, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டை உடைசல் பஸ்கள் அடிக்கடி பிரேக் டவுனாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 54 புறநகர் பஸ்கள் உள்ளன. இதில் 51 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 3 மாற்றுப்பஸ்கள் உள்ளன. 8 புதிய பஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

நகர் கிளையில் 67 பஸ்கள் உள்ளன. இதில் 52 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 11 புறநகர் பஸ்களாக இயக்கப்படுகின்றன. 4 மாற்றுப்பஸ்கள் உள்ளன. தற்போது இவை அனைத்தும் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்படுவதால் 20 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற பஸ்கள் அனைத்தும் ஓட்டை, உடைசலாக உள்ளன. ஓடும் வரை ஓடட்டும் என்ற நிலையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகம் பஸ் ஸ்டாப் பகுதியில் அரண்மனையில் இருந்து ஆற்றாங்கரைக்கு இயக்கப்பட்ட 19 ஏ வழித்தட பஸ் முன் பக்க டயர் பஞ்சர் ஆகியது. பயணிகளுடன் சென்ற பஸ்சை டிரைவர் ஓரம் கட்டினார்.

பஸ்சில் இருந்த 30 க்கும் மேற்பட்ட பயணிகளை நடுரோட்டில் நிறுத்தினர். பின்னர் அடுத்து வந்த அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பினர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பஸ்க்கு ஸ்டெப்னி டயர் இல்லாததால் பஞ்சரான விஷயம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்பு மாற்று டயரை கொண்டு வந்து பஞ்சரான டயரை மாற்றிய பின்பு மீண்டும் பஸ் இயக்கப்பட்டது.

பெரும்பான்மையாக காலாவதியான பஸ்கள் இயக்கப்படுவதால் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாத நிலை தான் உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை முறையாக பராமரிப்பு செய்து பயணிகளை நடு ரோட்டில் நிறுத்தாமல் பயணிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

------------






      Dinamalar
      Follow us