/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குரூப் 2, 2 ஏ தேர்வு 341 பேர் எழுதினர்
/
குரூப் 2, 2 ஏ தேர்வு 341 பேர் எழுதினர்
ADDED : பிப் 09, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ.,வில் உள்ள பணிகளுக்கான தேர்வு நடந்தது.
ராமநாதபுரத்தில் எம்.ஜி., பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 376 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதில் காலை, மாலை இரு வேளைகளில் நடந்த தேர்வுகளில் 341 பேர் பங்கேற்றனர். 35 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையத்தை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். அவருடன் டி.ஆர்.ஓ., கோவிந்தராஜூலு, ராமநாதபுரம்கோட்டாட்சியர் ராஜமனோகரன் இருந்தனர்.

