sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி  வழக்கு விசாரணை ஜூன் 27க்கு தள்ளிவைப்பு 

/

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி  வழக்கு விசாரணை ஜூன் 27க்கு தள்ளிவைப்பு 

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி  வழக்கு விசாரணை ஜூன் 27க்கு தள்ளிவைப்பு 

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி  வழக்கு விசாரணை ஜூன் 27க்கு தள்ளிவைப்பு 


ADDED : மே 17, 2025 12:51 AM

Google News

ADDED : மே 17, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில்ஊழியர்களின் சேம நல நிதியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் விசாரணை ஜூன் 27க்கு தள்ளி வைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்கள் சேம நல நிதி கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை கோயில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவனருள்ெகுமரன், கணக்கர் ரவீந்திரன் ஆகியோர் மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பின் 2020ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

போலீசார் விசாரணையில் ராமநாதபுரம் கரூர் வைஸ்யா பாங்கில் கோயில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு துவங்கி மோசடி செய்ததும், கணக்கு தொடங்க முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

சிவனருள்குமரன் கோயில் பணத்தை தனது தந்தை கோபால் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவனருள்குமரன், இவரது தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் ஜே.எம். 2வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

கணக்கர் ரவீந்திரன் மட்டும் ஆஜரானார். சிவனருள்குமரன், அவரது தந்தை கோபால், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் வழக்கை ஜூன் 27க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us