/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்சிப் பொருளான உயர்கோபுர மின் விளக்கு
/
காட்சிப் பொருளான உயர்கோபுர மின் விளக்கு
ADDED : டிச 30, 2025 05:23 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உயர்கோபுர மின்விளக்கு பயன்பாடின்றி இருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் உயர் கோபுரம் மின் விளக்கு பயனுள்ளதாக உள்ளது. கடந்த சில நாட்களாக இது எரியவில்லை. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
முறையான பழுது பார்ப்பு பணிகள் செய்யப்படாததால் உயர்கோபுர மின்விளக்கு பயன்பாடின்றி உள்ளது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே காட்சிப்பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைத்து எரியச் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

