/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்கிரமேசியில் குதிரை எடுப்பு விழா கோலாகலம்
/
அக்கிரமேசியில் குதிரை எடுப்பு விழா கோலாகலம்
ADDED : ஜூலை 05, 2025 11:09 PM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
பெரிய அக்கிரமேசி கிராமத்தில் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இங்கு ஏப்.,30ல் பிடி மண் எடுத்து குதிரை வாகனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஜூலை 4 காலை 9:00 மணிக்கு குதிரை எடுப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது குதிரைகளை கள்ளிடனேந்தல் கிராமத்திலிருந்து 7 கி.மீ., சுமந்து சென்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகும் நடக்கும் இந்த விழாவில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குதிரை முன்பு நெல் கொட்டி வழிபாடு நடத்தினர். நேற்று காலை 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதுகட்டு விழா நடந்தது.
காப்பு கட்டி விரதம் இருந்த இளைஞர்கள் காளைகளை அடக்கினர்.