ADDED : ஜன 30, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர்நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேயவாரம் நிறைவு விழா நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.ஜன.24 முதல் 30 வரை நடந்த மனிதநேய வார விழாவில்பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்கள், விடுதிகாப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம்,ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, தனி தாசில்தார் வீரராஜ்,விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.