/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவபாஷாணம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
/
நவபாஷாணம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED : ஏப் 15, 2025 05:34 AM
தேவிபட்டினம்: தொடர் விடுமுறை காரணமாக, தேவிபட்டினம் நவபாஷாணம் நவக்கிரகம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு, வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக தேவிபட்டினம் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வருகை தரும் பக்தர்கள் நவக்கிரங்களை சுற்றி வந்து தரிசனம் செய்வதுடன், நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.