/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED : மே 18, 2025 10:11 PM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும்
ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த சில வாரங்களாக நவபாஷாணம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் பக்தர்கள் நவபாஷாணத்திற்கு வந்து தரிசனம் செய்தனர்.
இரண்டு நாட்களாக சீதோஷ்ண நிலை காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் நவக்கிரகங்கள் கடல் நீரில் மூழ்கி இருந்த நிலையில் நேற்று கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து நவகிரகங்கள் வெளியில் தெரிந்தன.
இதனால், பக்தர்கள் நவக்கிரகங்களை வழிபட்டுச் சென்றனர்.