sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு

/

இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு

இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு

இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு


ADDED : டிச 21, 2024 06:53 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து சுற்றுப்புற பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.

மேலும் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும், மாலையில் பணி முடிந்து இந்த பஸ்ஸ்டாண்டில் இருந்தே ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பஸ்ஸ்டாப் பகுதி கடந்த சில வாரங்களாக இருள் சூழ்ந்துள்ளது.

ரோட்டோரம் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாததால் பஸ் ஸ்டாப் வரும் பயணிகளும் அப்பகுதி பொதுமக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us