sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் கார்டு வழங்க வலியுறுத்தல்

/

ரேஷன் கார்டு வழங்க வலியுறுத்தல்

ரேஷன் கார்டு வழங்க வலியுறுத்தல்

ரேஷன் கார்டு வழங்க வலியுறுத்தல்


ADDED : மார் 27, 2025 07:20 AM

Google News

ADDED : மார் 27, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் திருமணம் நடைபெற்ற ஏராளமானோர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். ரேஷன் கார்டு தனியாக இருக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும், தற்போது அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற வசதியாக இருக்கும் என்பதால் புதிய கார்டு கேட்பது தொடர்கிறது.

ரேஷன்கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் நாள் தோறும் அலுவலகங்களுக்கு சென்று கார்டு வந்து விட்டதா என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இது குறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது- புதிய கார்டு இல்லாததால் எந்த பணிகளுக்கும் விண்ணப்பிக்கவும், முக்கிய தேவைகளுக்கு ரேஷன்கார்டு ஜெராக்ஸ் கொடுக்க முடியவில்லை. இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கவும் முடியவில்லை.

ஏற்கனவே பெற்றோர் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்த பின்னரே, புதிய கார்டுக்கு விண்ணப்பித்தோம். தற்போது பெயர்களை நீக்கிவிட்டதால் எங்களது பெயர்கள் எதிலும் இல்லாத நிலை உள்ளது.

ஆகவே விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன்கார்டுகளை சீக்கிரமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us