/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
/
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
ADDED : நவ 19, 2025 07:27 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போரட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், அப்துல் நஜ்முதீன் ஆகியோர் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் வருவாய் துறையினர், நெடுஞ்சாலைதுறை, கரூவூலம், சமூகநலத்துறை என 1200க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்றனர்.

