/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்ணெண்ணெய் குண்டுவீச்சு: கைது 2
/
மண்ணெண்ணெய் குண்டுவீச்சு: கைது 2
ADDED : பிப் 09, 2026 05:14 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த குமரகுரு 40, அப்பகுதியில் கடல் சார்ந்த சங்கு கடை வைத்துள்ளார். இவரது சகோதரர் பிரபு, ராமேஸ்வரம் திட்டக்குடியில் டீக்கடை நடத்துகிறார்.
இதன் அருகில் உள்ள அலைபேசி கடையில் நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன் 27, கோவிந்தராஜ் 28, ஆகியோர் அலைபேசி வாங்கியபோது டீக்கடை முன் தகராறு செய்தனர். அப்போது அங்கிருந்த குமரகுரு விரட்டியதால் அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் சமரசம் செய்தனர்.
ஆத்திரமடைந்த பார்த்திபன், கோவிந்தராஜ் நேற்று முன்தினம் இரவு மூடப்பட்டிருந்த குமரகுருவின் சங்கு கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடை முன் இருந்த ஒரு சங்கு மூடை எரிந்தது. பார்த்திபன், கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர்.

