நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி அய்யனார் கோயிலில் கிடா வெட்டு விழா நடந்தது. முன்னதாக மூலவர் அய்யனாருக்கு கிராமத்தார் சார்பில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக வழங்கி இருந்த ஆட்டு கிடாய்கள் கோயில் முன்பு பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.