ADDED : செப் 27, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நவராத்திரி விழாவுக்கு வீடுகளில் வைத்துள்ள கொலு அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து தரிசித்தனர்.
செப்.,22 முதல் நவராத்திரி விழா துவங்கியதால் ராமேஸ்வரத்தில் கோயில் ரதவீதி உள்ளிட்ட பல தெருக்களில் உள்ள சில வீடுகளில் ஏராளமான சுவாமி, அம்மன் சிலைகள் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் கொலுவில் அலங் கரித்து வைத்துள்ளனர்.
இந்த கொலுவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், பாரதியார் பொம்மைகளும் இடம் பெற்றுள்ளது. இதனை தினமும் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.