நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. மகாதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பின் 108 விளக்கு பூஜை நடந்தது.
இதே போன்று முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் பக்தர்கள் குழு சார்பில் 108 விளக்கு பூஜை நடந்தது.
முதுகுளத்துார் திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் கோயிலிலும் விளக்கு பூஜை நடந்தது.

