ADDED : நவ 18, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : -முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு விளக்குபூஜை நடந்தது.
மகாதேவருக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. பின்பு 108 விளக்குபூஜை நடந்தது.
கமுதி அருகே புதுக்கோட்டை அக்னி வீரபத்திரன் கோயிலில் விளக்குபூஜை நடந்தது.
மூலவரான அக்னி வீரபத்திரனுக்கு பால், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம், பூஜை நடந்தது. விளக்கு பூஜை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.