/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் திறப்பு விழாவுக்கு 6 மாதமாக காத்திருக்கும் நுாலகம்; புத்தகங்கள் வீணாகிறது
/
பரமக்குடியில் திறப்பு விழாவுக்கு 6 மாதமாக காத்திருக்கும் நுாலகம்; புத்தகங்கள் வீணாகிறது
பரமக்குடியில் திறப்பு விழாவுக்கு 6 மாதமாக காத்திருக்கும் நுாலகம்; புத்தகங்கள் வீணாகிறது
பரமக்குடியில் திறப்பு விழாவுக்கு 6 மாதமாக காத்திருக்கும் நுாலகம்; புத்தகங்கள் வீணாகிறது
ADDED : டிச 11, 2024 04:55 AM

பரமக்குடி : பரமக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி கிளை நுாலகம் 6 மாதமாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.
மாவட்ட கிளை நுாலகம் 1954 ல் பரமக்குடியில் வாடகை கட்டடத்தில் துவங்கி 70 ஆண்டுகளாக இயங்கியது. இந்த கட்டடம் சேதமடைந்ததால் 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள குறுகிய சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது.
இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நிலையில் 50 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே வைப்பதற்கு இடவசதி உள்ளது. இதனால் பல ஆயிரம் புத்தகங்கள் வீணாகி கரையான் மற்றும் மழை நீரில் வீணாகிறது.
இந்நிலையில் 2022 ல் நுாலக கட்டடம் வைகை இல்லம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கட்ட முடிவாகியது. 2023ல் துவங்கிய கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா நடத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு புத்தகங்கள் அடுக்கி வைப்பதுடன், வாசகர்கள் படிப்பதற்கான வசதி, கணினி, வைபை வசதி செய்யப்படவுள்ளது. எனவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டி தேர்வு எழுதுவோர் வசதியை கருத்தில் கொள்வதுடன், வீணாகும் புத்தகங்களை கிளை நுாலகத்திலிருந்து மீட்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.