sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சரக்கு வேன் உரிமையாளர் கொலை கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

/

சரக்கு வேன் உரிமையாளர் கொலை கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

சரக்கு வேன் உரிமையாளர் கொலை கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

சரக்கு வேன் உரிமையாளர் கொலை கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜூன் 14, 2025 06:26 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மினி சரக்கு வேன் உரிமையாளர் சக்திவேலை 47, கத்தியால் குத்திக்கொலை செய்த கொத்தனார் ஞானபாண்டியனுக்கு 47, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் நரியங்குடியைச் சேர்ந்த சக்திவேல் திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் வசித்தார். அவரது மனைவி சங்கரி கிராமப்புற தபால் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு மகள் மங்கயைர்கரசி, மகன் வைரமுத்து உள்ளனர்.

சக்திவேல் 20 ஆண்டுகளாக எஸ்.எம்.டிராவல்ஸ் என்ற பெயரில் மினி சரக்கு வாகனத்தில் ராமநாதபுரத்தில் இருந்து மளிகை பொருட்களை எடுத்து சென்று வண்ணாங்குண்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சப்ளை செய்து வந்தார்.

இவர் 2019 ல் வண்ணாங்குண்டு பகுதியில் சரக்கு வாகனத்தில் சென்ற போது மயில் ஒன்று வாகனத்தில் அடிபட்டது. மயிலை அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஞானபாண்டியன் மீட்டார். இது தொடர்பாக சக்திவேலுக்கும், ஞானபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்களுக்குள் விரோதம் இருந்தது.

இந்நிலையில் 2019 அக்., 24ல் வண்ணாங்கண்டு வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே ரோட்டில் மினி சரக்கு வாகனத்தில் சென்ற சக்திவேலை மறித்த ஞானபாண்டியன் கத்தியால் குத்தினார்.

இதில் சம்பவயிடத்திலேயே சக்திவேல் பலியானார்.

மனைவி சங்கரி புகாரில் திருப்புல்லாணி போலீசார் கொத்தனார் ஞானபாண்டியனை கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.

ஞானபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மெஹபூப் அலிகான் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us