ADDED : ஜன 10, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தெய்வகனி தலைமையிலான அலுவலர்கள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரியில் அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். தெய்வகனி புகாரில் திருவாடானை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

