ADDED : நவ 13, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை; மார்க்சிஸ்ட் கம்யூ., கீழக்கரை தாலுகா 24 வது மாநாடு நடந்தது.
தலைமை குழு நிர்வாகி முருகேசன் தலைமை வகித்தார். கவுன்சிலர் சூரியகலா முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் கிருஷ்ணன் கட்சிக் கொடி ஏற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சிவாஜி பேசினார்.
வேலை அறிக்கையை மகாலிங்கம் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி, சர்புதீன், சாந்தி, தாலுகா குழு நிர்வாகிகள் மகாலிங்கம், முனியாண்டி, முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தாலுகா குழு செயலாளராக முருகேசன் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக ஒன்பது பேர் கொண்ட தாலுகா குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முனியாண்டி நன்றி கூறினார்.