/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சிவன் கோயிலில் சோமவார பிரதோஷ விழா
/
பரமக்குடி சிவன் கோயிலில் சோமவார பிரதோஷ விழா
ADDED : ஜன 28, 2025 05:18 AM

ஹர ஹர சிவ சிவ கோஷத்துடன் வழிபாடு
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ வழிபாடு விழா நடந்த நிலையில், ஹர ஹர, சிவ சிவ கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.
பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் பிரதோஷ நந்திக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் சன்னதி நந்திக்கு அபிஷேகத்துடன் சந்தன காப்பு சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சன்னதி நந்திக்கு பல வகையான அபிஷேகங்கள் நடத்தி பக்தர்கள் வலம் வந்தனர். மீனாட்சி அம்மன் கோயில் நந்திக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றி மகாதீபாரதனை நடந்தது.
தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்தர்கள் வலம் வந்து வழிபாடு நடத்தினர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவசாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.