/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
/
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
ADDED : அக் 21, 2024 04:53 AM

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வடகிழக்கு பருவமழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்புதுறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மழை, ஆபத்து காலங்களில் எப்படி பாதுகாப்பது, மழை காலத்தில் கால், இடுப்பு எலும்புமுறிந்தவரை தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு காப்பாற்றுவார்கள் என ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆறு, கண்மாய் மற்றும் குளங்களுக்கு துணி துவைக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்பதையும், மின்சாரம், அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தினர்.
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாசில்தார் அமர்நாத் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

