sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்

/

கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்

கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்

கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்


ADDED : ஆக 07, 2025 05:27 AM

Google News

ADDED : ஆக 07, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகேவழுதுார் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் ஜூலை 27 ல் காப்புகட்டுதலுடன் துவங்கி 10 நாட்களாக முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது.

முக்கிய நிகழ்வாக உலக நலன், மழைவேண்டி நேற்று முன்தினம் மாரியம்மன் கோயிலில் கரகம் எடுத்தும், நேற்று பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலம் கொண்டு சென்று வழுதுார் பெரிய ஊருணியல் கரைத்தனர். கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

இதே போன்று வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவில் வாழவந்தான் கோயிலில் இருந்து கரகம் எடுத்தும், முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வழிப்பட்டனர்.

அழகன்குளம் வடக்குதெருமுத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் வந்தனர். அம்மனுக்கு, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* திருப்புல்லாணி தெற்குத்தெரு புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளை கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது.நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளுக்கு பிறகு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தவாறு ஊர்வலம் வந்தனர். பின்னர் ஊருணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

* வடக்கு மேதலோடை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த ஜூலை 27ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் கூட்டுப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாவிளக்கு எடுத்தனர். பெண்கள் கோலாட்டம், கும்மியாட்டம், ஆண்களின் ஒயிலாட்டம் நடந்தது. அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். பாரிகள் பெரிய ஊருணியில் கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை மற்றும் வடக்கு மேதலோடை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

* சிக்கலில் உள்ள அலங்கார மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று வரிசையாக வைக்கப்பட்ட முளைப்பாரிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிக்கல் நகர் பகுதி வழியாக ஊர்வலமாக வந்து பாரி ஊருணியில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

* ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலேந்தல் சமயபுரத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட முளைப்பாரிகளை, பெண்கள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

* தொண்டி தெற்குதோப்பு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோயிலில் வைத்து வழிபாடு செய்த பெண்கள் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து தொண்டி கடற்கரைக்கு சென்றனர். அங்கு முளைப்பாரிகளை வைத்து வழிபாடு செய்தனர். கும்மியாட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து கடலில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us