/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம்
/
முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம்
ADDED : ஏப் 03, 2025 05:10 AM

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
பின்பு கொடி மரத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பால்குடம், அக்கினி சட்டி, பூக்குழி உட்பட நேர்த்திக்கடன் செலுத்தும் 2000 பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
ஏப்.8ல் பொங்கல் வைத்தல், ஏப்.9ல் அக்கினிசட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல், சேத்தாண்டி வேடம், ஏப்.11ல் விளக்கு பூஜை, ஏப்.12ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. தினந்தோறும் முத்துமாரியம்மன் வெள்ளிக்குதிரை, மயில், யானை, சிம்மம், காமதேனு உள்ளிட்ட வாகனத்தில் அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்துள்ளனர். மேலும் விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கமுதி காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

