sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்

/

கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்

கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்

கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்


ADDED : ஜன 18, 2024 05:41 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரிப்பால், பெரும்பாலான கிராமங்களில் மாட்டுப்பொங்கல் கொண்டாடவில்லை.

திருவாடானை தாலுகாவில் நாட்டுக்கோழி, கறவைமாடுகள், ஆடுகள் வளர்ப்பு குடிசை தொழில் போல் பெருகி வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் குளிர் காற்று வீசியது. குளிர்காற்று, மழை, வெயில் என பருவநிலை மாற்றத்தால் ஆடு, மாடுகள் மேய்ச்சல் இடங்களில் சேறும், சகதியுமாக மழை நீர் தேங்கியது. அந்த இடங்களில் கழிவு நீர் கலந்த மழை நீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் தாக்கின. ஆடுகளுக்கு வயிற்று போக்கு (கழிச்சல்) நோய் ஏற்பட்டு உணவு உண்ணமுடியாமல் ஒரே இடத்தில் சுருண்டு படுத்து கிடக்கின்றன. வாய், தாடைகளில் வீக்கம் ஏற்பட்டது.

கால்நடைகளுக்கு கானை நோய் (அம்மை) தாக்கியுள்ளது. இந்த ஆண்டு மாட்டுப்பொங்கலை விமரிசையாக கொண்டாட முடியவில்லை. ஆடுகள் இறப்பு அதிகரித்து வருவதாக பாண்டிகுடி மக்கள் கவலை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us