ADDED : ஜூலை 18, 2026 12:27 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பாண்டி கண்மாய் முக்கு ரோட்டில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை 2 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை புதிய நிழற்குடை கட்டாததால் பஸ்சிற்க்காக காத்திருக்கும் வெண்ணீர் வாய்க்கால், கிருஷ்ணாபுரம், வெங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்கள் வெயில், மழைக்காலங்களில் ரோட்டோர மரத்தடியில் காத்திருந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் மக்கள் நிற்பது தெரியாமல் பஸ் நிற்காமல் செல்கிறது. எனவே புதிய பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
