ADDED : ஏப் 23, 2025 05:33 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி : பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சவுராஷ்டிர தேசிய கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினர். இதில் 180 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகிறது.
தொடர்ந்து சுப்ரஜா பிரகாஷினி 123 மதிப்பெண் பெற்றார். ஸ்ரீ கீர்த்திகா 103 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இவர்களை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
