ADDED : செப் 05, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு குத்துவிளக்கு, கட்டில், ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் பட்டது.
விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கீழத்துாவல் வடமாடு மஞ்சு விரட்டு குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.