ADDED : செப் 27, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் பேராவூர் ஊராட்சியில் நடக்கிறது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு முகாமை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஹாஜா முஹைதீன் வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர் ஜாஹீர் உசைன், திட்ட அலுவலர் தாமரைக் கண்ணன் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.