/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சாயல்குடி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : டிச 31, 2025 05:22 AM
சாயல்குடி: சாயல்குடி நகரில் இடங்களில் பயணிகளை அழைத்துச் செல்லக்கூடிய வாடகை வேன் மற்றும் ஆட்டோக்களை ரோட்டில் கண்டபடி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படகிறது. இதை போக்குவரத்துதுறை அதிகாரிகள் கண்டும் காணதது போல உள்ளனர்.
வளர்ந்து வரும் நகர் பகுதியாக உள்ள சாயல்குடி - அருப்புக்கோட்டை சாலை, ராமேஸ்வரம் சாலை, கன்னியாகுமரி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளின் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் டூ வீலர்கள் அதிகளவு நிறுத்தப்படுகிறது.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் நோக்கம் போல் தன்னிச்சையாக குறிப்பிட்ட அளவை காட்டிலும் தாண்டி விற்பனை செய்கின்றனர். காலை, மாலை பள்ளி, கல்லுாரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எம். பெத்தராஜ் கூறியதாவது: சாயல்குடி நகரில் சாலையோர ஆக்கிரமிப்பால் சனிக்கிழமை சந்தை நாட்களில் பல நகரங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாயல்குடியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையிட்டாலும் அலுவலர் வரும் தகவல் இங்கு போன் மூலம் தெரியப்படுத்தப்பட்டு அந்த சமயத்தில் மட்டும் சரி செய்து கொள்கின்றனர்.
எனவே கடலாடி வருவாய் துறையினர், போலீசார், பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர், பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு நிர்வாகம் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

