/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுவடை இயந்திரம் மோதி முதியவர் பலி
/
அறுவடை இயந்திரம் மோதி முதியவர் பலி
ADDED : ஜன 28, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே தெற்கு ஆண்டாவூரணியை சேர்ந்தவர் மாணிக்கம் 67. இவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது வயலில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்தின் மீது இயந்திரம் மோதியது.
இதில் காயமடைந்த மாணிக்கம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவர் அய்யப்பனை 27, எஸ்.பி.பட்டினம் போலீசார் கைது செய்தனர்.