sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முதுகுளத்துார் கிராமங்களில் அழிக்கப்படும் பனை மரங்கள்

/

முதுகுளத்துார் கிராமங்களில் அழிக்கப்படும் பனை மரங்கள்

முதுகுளத்துார் கிராமங்களில் அழிக்கப்படும் பனை மரங்கள்

முதுகுளத்துார் கிராமங்களில் அழிக்கப்படும் பனை மரங்கள்


ADDED : நவ 12, 2024 04:52 AM

Google News

ADDED : நவ 12, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுற்றுவட்டார கிராமங்களில் செங்கல் சூளைக்காகவும், தீயிட்டு எரிப்பதாலும் பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

முதுகுளத்துார் வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான கிராமங்களில் பனை மரங்கள் அதிகளவில் இருந்தன. காலப்போக்கில் பனை மரங்கள் முறிந்து விழுந்தும் சிலர் வெட்டியும் அழித்துள்ளனர்.

தற்போது முதுகுளத்துார்-ராமநாதபுரம் ரோடு காக்கூர் அருகே ரோட்டோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தும், சிலர் தீயிட்டு எரித்தும் வருகின்றனர். மேலும் செங்கல் சூளையில் எரிப்பதற்காக பனை மரங்களை அழித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இதனால் ஒரு காலத்தில் ஏராளமான பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது குறைந்து கொண்டே வருகின்றன. பல ஆண்டு பயன் தந்த பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படும் அவலநிலை தொடர்கிறது.

இதனால் முதுகுளத்துார்வட்டாரத்தில் பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us