ADDED : ஏப் 02, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா என்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று(ஏப்.1) காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர விழா துவங்கி ஏப்.,10 வரை நடக்கிறது.
தினமும் மாலை 6:00 மணிக்கு பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,10ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை, மாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு பக்தர்கள் பால்குடம், காவடி செலுத்துதல் மற்றும் மறுநாள் அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.