ADDED : மார் 17, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே புலவர்வேளாண்குடியில் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., முருகேசன் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் விருதுநகர் அமைந்துள்ளது. அம்மாவட்ட அமைச்சர் தங்கம்தென்னரசு முதல்வருடன் நெருக்கமாக உள்ளார்.விருதுநகர் மாவட்டத்திற்கு எது தேவை என்பதை முதல்வரிடம் சொன்னால் உடனடியாக முதல்வர் கையெழுத்திடுவார்.
ஆனால் நாம் ஒன்றுக்கு பத்து முறை சென்றால் மட்டுமே அந்த திட்டத்தினை பெற முடியும். ஆனால் தொடர்ந்து முயற்சித்து கிராம மக்களுக்கு திட்டத்தினை பெற்றுக்கொடுத்து விடுவேன்.
இவ்வாறு பேசினார்.

