sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஐந்து முனை ரோடு பஸ் ஸ்டாப் பயன்பாட்டிற்கு வருவது எப்போது; பயணிகள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு

/

ஐந்து முனை ரோடு பஸ் ஸ்டாப் பயன்பாட்டிற்கு வருவது எப்போது; பயணிகள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு

ஐந்து முனை ரோடு பஸ் ஸ்டாப் பயன்பாட்டிற்கு வருவது எப்போது; பயணிகள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு

ஐந்து முனை ரோடு பஸ் ஸ்டாப் பயன்பாட்டிற்கு வருவது எப்போது; பயணிகள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 06, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, : பரமக்குடி ஐந்துமுனை ரோடு இளையான்குடி பஸ் ஸ்டாப் செயல்படாமல் உள்ள நிலையில் பயணிகள், டிரைவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து இளையான்குடி செல்லும் பஸ்கள் ஐந்து முனை ரோட்டை கடந்து செல்கின்றன.தொடர்ந்து ஐந்து முனை ரோடு பகுதியில் அனைத்து பஸ்களிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஏறி, இறங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இளையான்குடி பஸ் ஸ்டாப் ஐயப்பன் கோயில் முன்பு வாறுகாலையொட்டி இருக்கிறது. இங்கு பயணிகளுக்கு போதிய வசதி இல்லாத சூழலில் வாறுகால் இருப்பதால் ஆபத்தான நிலை உள்ளது.

இதனால் முதுகுளத்துார்மேம்பாலம் கீழ்ப்பகுதியில் வளைவான இடத்தில்பயணிகள் நிற்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு முறை பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள், டூவீலர் ஓட்டிகள் செல்லும் போது அச்சத்துடன் இருக்கின்றனர்.

எனவே பஸ் ஸ்டாப் பகுதிக்கு அருகில் உள்ள வாறுகாலை சீரமைத்து பயணிகள் அச்சமின்றி ஸ்டாப்பில் நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us